நல்வரவு GOOGLEYOUNG உங்கள் அணைவரையும் அன்புடன் வரவேற்கின்றது...!

Google YOUNG
உங்கள் அணைவரையும் அன்புடன் வரவேற்கின்றது...
நாங்கல்லாம் மோசமானவங்கள்ளையே முக்கியமானவங்க

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 மே, 2010

டிவிட்டரில் சச்சின் பரபரப்பானது ட்விட்டர்




















இந்திய
டிவிட்டர்வெளியின் மிகப் பெரிய செய்தி இன்று வெளியாகி இருக்கிறது. சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
குறும் வலைப்பதிவு சேவையான டிவிட்டரில் எத்தனையோ பிரபலங்கள் செயல்பட்டு வருகின்றனர். வருங்காலத்தில் மேலும் பல பிரபலங்கள் டிவிட்டர் அருமையை உணர்ந்து இந்த சேவையை பயன்படுத்த துவங்கலாம் என்றாலும், இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருப்பதற்கு நிகரான மாபெரும் நிகழ்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். இந்திய டிவிட்டர்வெளி இனி முன்போல இருக்காது என்று செய்தித்தளம் ஒன்று சச்சினின் டிவிட்டர் பிரவேசத்தை வர்ணித்துள்ளது. அது உண்மைதான். சச்சினின் வருகைக்கு பிறகு இந்திய டிவிட்டர்வெளியில் பல மாற்றங்களை காணலாம். குறிப்பாக டிவிட்டர் மேலும் பிரபலமாகலாம். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், அழகு தேவதை ஷில்பா ஷெட்டி என டிவிட்டரில் இந்திய பிரபலங்கள் கணிசமாகவே இருக்கின்றனர்.ஐபிஎல் சர்ச்சையால் அமைச்சர் பதவி இழந்த சசி தரூர் டிவிட்டரில் ஒரு நட்சத்திரமாகவே இருக்கிறார். அதிகபட்சம் 140 எழுத்துக்களுக்குள் கருத்துக்களை வெளியிடும் வசதி கொண்ட டிவிட்டர் சேவையானது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான ஏற்ற மேடையாக கருதப்படுகிறது. பிரபலங்களை பொறுத்தவரை டிவிட்டர் மூலம் ரசிகர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். ரசிகர்களும் அவர்களை டிவிட்டர் வழியே பின்தொடர்ந்து உரையாடலாம். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்லே, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்களும் டிவிட்டரில் இருக்கின்றனர். அணியிலிருந்து நீக்கப்பட்ட தகவலை எல்லாம் டிவிட்டரில் வெளியிட்டு மனக்குமுறலை பகிர்ந்து கொண்ட வீரர்களும் இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களை பொறுத்த வரை டிவிட்டர் பிசாசு அவர்களை இன்னமும் பிடித்து ஆட்டத் துவங்கவில்லை. ஆனால் அவரது ரசிகர்களை டிவிட்டர் பேய் பிடித்திருக்கிறது. பலர் தங்களது அபிமான நட்சத்திரங்கள் சார்பாக டிவிட்டர் கணக்கை இயக்கி வருகின்றனர். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் பெயரில், ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிட்டர் கணக்குகள் இருக்கின்றன. ஆனால் சச்சின் டெண்டுல்கர் இதுவரை நேரடியாக டிவிட்டரில் இறங்கவில்லை. இந்த குறையை போக்கும் வகையில் பேட்டிங் மகாராஜாவான சச்சின் டிவிட்டரில் இறங்கி விளாச துவங்கியிருக்கிறார். இறுதியாக உண்மையான எஸ்ஆர்டி (சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்பதற்கான டிவிட்டர் சுருக்கம்) டிவிட்டரில்நுழைந்திருக்கிறேன் என்று தனது முதல் குறும் பதிவில் (டிவிட்டர் மொழியில் டிவீட்) குறிப்பிட்டிருந்த சச்சின் வெஸ்ட் இண்டீசில் 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடி வரும் தன்னுடைய சகாக்களுக்கு வெற்றி வாழ்த்துக்களை முதல் வேலையாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். சச்சின் டிவிட்டரில் வந்த செய்தி இணைய உலகில் காட்டுத்தீப் போல பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இணையவாசிகள் கொண்டாட்டத்தில் ஈடுபடாத குறைதான். சச்சின் ரசிகர்கள் அவரை டிவிட்டருக்கு வருக வருக என மனதார வரவேற்று மகிழ்ந்தனர். ஒரு ரசிகர் நேருவின் சுதந்திர உரையை நினைவுப்படுத்தும் வகையில், நள்ளிரவின் முடிவில் இந்தியர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது சச்சின் டிவிட்டர் இணைந்தார் என்று உற்சாகம் பொங்க தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஷில்பா ஷெட்டிஒரு வழியாக கிரிக்கெட் கடவுள் சச்சின் டிவிட்டருக்கு வந்து விட்டார் மனதார வரவேற்கிறேன்என்று கூறியிருந்தார்.சச்சின் தன்வசமுள்ள பிளாக்பெர்ரியின் மூலம் டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அவரது பேட்டிங் போலவே பதிவுகளும் நேர்த்தியாகவே உள்ளன. சற்றைக்கு முன் பார்த்த பதிவில் சச்சின், ஷேவாக் 2வது முறையாக தந்தையாகி இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். சச்சினின் டிவிட்டர் முகவரி: www.twitter.com/sachin_rt.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக