நல்வரவு GOOGLEYOUNG உங்கள் அணைவரையும் அன்புடன் வரவேற்கின்றது...!

Google YOUNG
உங்கள் அணைவரையும் அன்புடன் வரவேற்கின்றது...
நாங்கல்லாம் மோசமானவங்கள்ளையே முக்கியமானவங்க

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 மே, 2010

டீ.ஆரின் புதிய படம் - அதிர்ச்சிகரமான தகவல்கள்



மீண்டும் ஒரு முறை தன்னை அழுத்தமாய் நிரூபிக்க காதல் கதைகள் கை கொடுக்காதென்று தெரிந்து அதிரடி மசாலா படங்கள் இயக்குவதென்று முடிவு செய்து சில உச்ச நடிகர்களை சந்திக்கிறார் தன்னம்பிக்கையின் தலைமகன் டீ.ராஜேந்தர் (சப்பா.. முடிச்சுட்டேன்).முதலில் சுள்ளான் தனுஷிடம் செல்கிறார்.
டீஆர்: தம்பி தனுஷு உனக்குத்தான் திரையுலகம் புதுசு
எனக்கு பழசு..எப்பவும் உண்டு எனக்கு தனி மவுசு
தனுஷ்: சார்.. கதைய சொல்லுங்க சார்.
டீஆர்: உங்கிட்ட இல்லாதது சதை
எங்கிட்ட இருக்கறது கதை
வில்லனுக்கு விழும் உதை
நீதான் கொடுக்கனும் அதை..
வில்லனுக்கு ஒரு தங்கச்சி
ஆனா அவளோ உன் கட்சி
அவள தூக்கிட்டுபோய் வச்சி
பாட்டு ஒன்னு பாடுற மச்சி..
தனுஷ்: மெலடியா குத்துப் பாட்டா சார்?
டீ.ஆர்: (கையில் சிட்டிகை போட்டுக்கொன்டே பாடத் துவங்குகின்றார்)
உன் தங்கச்சியை கண்டேன்
என் கட்சியில் இழுத்தேன்
அழைத்ததும் வந்துவிட்டாள்
அவளுடன் வருவேன்
வேண்டியதை தருவேன்
ஆப்பை அவளே வைத்திடுவாள்"னு உன் பாட்டையே ரீமிக்ஸ் பண்ணிடுவோம்...
(அதற்குள் கஸ்தூரிராஜா அங்கே வர ஏரியா சூடாகிறது. இது சிம்புவின் சதி என க.ராஜா சொல்ல தனுஷ் உஷாராய் எஸ்கேப்புகிறார்)
அடுத்து அஜித்திடம் செல்கிறார் டீ.ஆர்.
அஜித் : சார்.வாங்க சார். நான் உங்ள பத்தி பேஸ மாட்டேன். உங்க படம்தான் பேஸனும்.
டீ.ஆர் : உன் வயித்துல இருக்கு பாரு தல 12 பேக்
பேசும்போதே வருது ஸ்பெல்லிங் மிஸ்டேக்
வாலி ஆசையெல்லாம் பழைய வரலாறு
உனக்கும் தமிழுக்கும் இருக்கு தகறாரு
அஜித் : என்ன சார் நீங்க. அத்திப்பட்டி தெர்யுமா ஸார். அது ஒரு கர்ப்பு சர்த்திரம். இன்னமும் வய்று எர்யுது ஸார்.
டீஆர் : உடம்பு மேல ஓடு வச்சிருக்கும் ஆமை
என் கதையில் வர்ற ஹீரோ ஒரு ஊமை
இந்தப் படத்துல உனக்கு இல்ல டயலாக்
ஓப்பனிங் ஸீன்லயே நடக்குது வெட்லாக்..
க்ளோஸப்புல காட்டுறோம் மும்தாஜோட செஸ்டு
இதுதான் இந்தக் கதையில வர்ற முதல் ட்விஸ்டு
அதுக்குள்ள‌ இருக்கு ஒரு பர்ஸ்
கதைப்படி அவங்க ஒரு நர்ஸ்
அஜித்: ஸார் அப்டியே ஓப்பனிங் சாங்குக்கு அவங்களையே ஆடிட சொல்லுங்க. நான் ஆட்னா பில்லா, ஏகன் ஹிட்டானதால‌ அஜித் ரொம்பத்தான் ஆட்றானு சொல்வாங்க.
டீஆர்: அதுதான் உன் படத்துல‌ வழக்கம்
எனக்கும் இனி அதுதான் பழக்கம்
பரமசிவன்ல ஆடினங்கப்பா ரகஸியா
இதுல மும்தாஜ் ஆடனும் செக்ஸியா
இதுதான் ஓப்பனிங் சாங். மை நேம் இஸ் பில்லாவ மறுபடியும் ரீமிக்ஸ் பண்றோம். ரீமிக்ஸையே ரீமிக்ஸ் பண்றது இதுதான் ஃபர்ஸ்ட்டு. இதாம்ப்பா பாட்டு. அதுக்கேத்தா மாதிரி உன் உடம்ப நீ ஆட்டு
"பே பே பே பேபே
பேபே பேபே
பே பே பேபே பேபே பேபே
பேபே பேபே
பேபேபே பேபேபே பேபே....." (இதை மை நேம் இஸ் பில்லாவின் ராகத்தில் பாட முடிந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு ஷொட்டு வைத்துக் கொள்ளுங்கள்)
அஜித் : பாட்ல அப்பப்ப நான் திர்ம்பி திர்ம்பி பார்க்ற மாத்ரி செய்யலாம் ஸார். பேக்கிரவுண்ட் சவுண்ட்ல “i am back i am back”வச்சிடுங்க ஸார்.
டீஆர்: எனக்கே வேலை சொல்ல நீ யாரு?
அப்படின்னா வேற டைரக்டர பாரு
திரையுலகத்தில நான் தான் சாரு
என் ஹீரோ தயிறு நீ வெறும் மோரு
கோபமாக அங்கிருந்து வெளியேறி விஜயிடம் செல்கிறார் அடுக்குமொழி ஆண்டவன். அஜித்திடம் கோபப்பட்டு வருவதை அறிந்து ஆவலுடன் வரவேற்கிறார் இளைய தளபதி.(போக்கிரியில் பிரபுதேவாவை அழைப்பது போல ராகத்துடன் அழைக்கிறார்)
விஜய் : அண்ணா... வாங்கண்ணா.. வாங்கண்ணா..
(பதிலுக்கு டீ.ஆர். ஆடுங்கடா பாடலின் பீட்டை வாயாலே போடுகிறார்.போதாதென்று ஒரு குட்டி ஆட்டமும் போடுகிறார்)
விஜய் : அப்புறம் என்னங்கண்ணா மேட்டரு. வீராசாமி மாதிரி ஏதாவது படம் எடுக்கிறீங்களா?
டீஆர்: எலுமிச்சைனா இங்கிலீஷ்ல லைம்
தமிழ்சினிமால இப்ப உங்க டைம்
டீஆரு பேச்சுல‌ எப்பவுமே ரைம்
நாம ஒன்னா படம் பண்ண எய்ம்.
(டீ.ஆரின் சதியை "ககபோ" செய்து கொண்ட தளபதி உஷாராகிறார்)
விஜய்: அண்ணா உங்க படத்துல நடிக்கிற அளவுக்கு எனக்கும் இன்னும் நடிப்பு வரலிங்கண்ணா. வேணும்னா உங்க பையன் சிம்புவ வச்சி எடுங்க. நான் ஒரு பாட்டு பாடுறேன்.
டீ.ஆர் : என் கையே எனக்கு ஒரு கம்பு
எனக்கு இன்னுமிருக்கு தெம்பு
எனக்கு பிடிக்காத பையன் சிம்பு
ஏன்னா அவன் பொண்ணுங்க சொம்பு.
அதே வேகத்தில் திரும்பி வந்து பிரஸ் மீட் வைத்து அடுத்த படத்தின் பெயர் "கருப்பனின் காதலி" என‌ வெளியிடுகிறார் டீ.ஆர்.
நிருபர்: படத்தோட பேர பார்த்தா விஜய்காந்த் நடிக்கிற படம் மாதிரி தெரியுதுங்களே. யார் சார் ஹீரோ?
டீ.ஆர்: உங்க கேள்வி ரொம்ப நைஸு
அவருக்கு வைக்கிறீங்க ஐஸு
எனக்கு இன்னும் ஆகல வயசு
38 தான் என் இடுப்பு சைஸு

சனி, 15 மே, 2010

உசுரே போகுதே ... உசுரே போகுதே ....













இந்த
பூமியில எப்ப வந்து நீ பொறந்த ,
என் புத்திக்குள்ள தீப்பொரிய நீ வெதச்ச ,
அடி தேக்கு மர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி ஒசரம் சிருசு தான்.......

அடி தேக்கு மர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி உசரம் சிருசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி,
கரும் தேக்கு மரக் காடு வெடிக்குதடி.....

உசுரே போகுதே ...
உசுரே போகுதே ....
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில....

ஓ... மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக் குயிலே....

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.

உடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்க ஆகல,
மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேக்கல....

தவியா , தவிச்சு, உசுரு தடம் கெட்டு திரியுதடி,
தைலம் குருவி என்னை தள்ளி விட்டு சிரிக்குதடி.

இந்த மம்முத கிருக்கு தீருமா?
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாருமா?

என் மயக்கத்தை தீர்த்து
வச்சி மன்னிச்சிருமா,
சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டில் வருகுதே....
சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!


உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

ஓ... மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழமுன்னுதெரிஞ்சிறுந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி.

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல....
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கதுல....

விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல.....

எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியல
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே

என்கட்டையும் ஒரு நாள் சாகலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள....
உன் நெனப்பு நெஞ்சுக்குள்ள....


சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டில் வருகுதே...
சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......


இனி ராவணன் களம் தொடங்குகிறது .......... தல ரஹ்மான் சார் என்னமா இசை அமைக்கிறாரு நிச்சயம் எல்லோரும் கேட்கணும் ராவணன் சாங் அப்பறம் கேளுங்க இப்ப கமன்ட் பண்ணுங்க ப்லீசே
இந்த மாத தகவல்படி


  • 400 மில்லியனுக்கும் அதிகமாக பயனர்கள் உள்ளனர் (இவ்வளவு பேர் வேல வெட்டி இல்லாம இருக்காங்க பாருங்க )
  • 35 மில்லியன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் தங்களது ஸ்டேட்ஸ் அப்டேட் பண்ணுகிறார்கள் (என்னத்த சொல்லுறது )
  • 60 மில்லியன் பயனர்கள் ஏதாவது அவர்களில் சுவரில் கிறுக்குகிறார்கள் (அப்பிடித்தானே தமிழ்ல வரும் )
  • ஒவ்வொரு மாதமும் 3 மில்லியனுக்கும் அதிகமான போட்டோ க்கள் அப்லோட் பண்ண படுகிறதாம் (அந்த கேவலமான போட்டோ எலாம பார்க்க வேண்டி இருக்கு )
  • 5 மில்லியன் அளவில் ஒவ்வொரு கிழமையும் ஏதாவது லிங்க் ,போட்டோ அல்பம் ,நோட் என்பன பகிரப்படுகிரதாம் .(நானும் என்ட ப்லோக்ஸ் போஸ்ட் எல்லாம் பண்ணுவன் அதுவும் சேர்த்துதான் )
  • 3.5 மில்லியன் நிகழ்வுகள் ஒவ்வொரு மாதமும் உருவாக்க படுகிறதாம் (நேற்று எனக்குநாளை மப்பு பார்ட்டி இருக்கு வாரியா எண்டு கேட்டு ஒரு எவென்ட் வந்தது அதுவும் சேரும் தானே )
  • 3 மில்லியன் அதிகமான அளவில் இயங்கு நிலை பக்கங்கள் உள்ளனவாம் .
  • அதிலும் 20 மில்லினுக்கும் அதிகமானோர் அந்த பக்கங்களுக்கு விசிறியாக ஒவ்வொரு நாளும் சேருகிறார்கள்.
இனி சராசரி அளவில் தகவல்கள்

  • சராசரியாக ஒவொரு பயனருக்கும் 130 நபர்கள் உள்ளனர் .
  • ஒரு மாதத்துக்கு 8 பேருக்கு நண்பராக இணைய அழைப்பு விடுப்பராம் ஒரு பயனர் .
  • ஒரு பயனர் ஒரு நாளில் 55 நிமிடங்களை பேஸ்புக்கில் உலா வருவதன் முலமாக செலவழிக்கிறார் (கேட்டுகொள்ளுகோ பொது மக்களே என்ன கொடுமை எண்டு )
  • ஒவ்வொரு மாதத்துக்கும் சராசரியாக 9 தடவை லைக் என்னும் பொத்தானை ஒரு பயனர் அழுத்துகிறார்.(நான் இதை விரும்ப வில்லை )
  • ஒரு பயனர் ஒரு மாதத்துக்கு சராசரியாக 25 கமெண்ட்ஸ் பண்ணுகிறார் (யோவ் அவனுகள இந்த ப்லோக்ஸ் பக்கம் வர சொல்லுங்க ஒரு பய கூட பக்கம் பக்கமா எழுதினாலும் கமெண்ட்ஸ் பண்ணுறாங்க இல்ல )
  • சராசரியாக ஒரு மாதத்துக்கு ஏதாவது நான்கு பக்கங்களுக்கு விசிறியாக ஒரு பயனர் மாறுகிறார் .
  • ஒரு பயனர் ஒரு மாதத்துக்கு சராசரியாக முன்று நிகழ்வுகளுக்கு அழைக்க படுகிறார் .
  • ஒரு பயனர் சராசரியாக 13 குருப்புக்கு மெம்பர் ஆகிறார் .


இன்னும் சில


  • இந்த பேஸ் புக் 70 மொழிகளில் கிடைகிறது .
  • 500 000 applications இயங்கு நிலையில் உள்ளதாம்

வியாழன், 13 மே, 2010

  King of Chess man -aanand 


மற்ற விளையாட்டுகளை , கிரிக்கெட் என்ற நாசமாய்ப் போன சூதாட்டம் நாசப்படுத்திய ஒரு தேசத்தில் நிஜமான விளையாட்டு வீரர்கள் கவனிக்கப் படுவதே இல்லை. ஒரு சிலர் கவனிக்கப் பட்டாலும் பணமே குறிக்கோளாய் திசைமாறிவிடுவதும் உண்டு என்றாலும் விளையாட்டை மிகவும் நேசிக்கும் வீரர்களும் உண்டு.. விஸ்வநாதன் ஆனந்த், செய்னா நோவல் , பைசுங் பூட்டியா மற்றும் பலர்..

விஸ்வநாதன் ஆனந்த்...
சதுரங்க ராஜா.. செஸ் விளையாட்டில் இந்தியாவின் பெருமையை உலகளவில் அறிய செய்தவர்.. தன் அபார திறமையால் இன்னும் தொடர்ந்து உலக செஸ் மகுடத்தை சூடிக் கொண்டே இருக்கிறார்.. சில நாட்களுக்கு முன்( மே 11) நடந்து முடிந்த உலக சாம்பியன் பட்டத்தை நான்காவது முறையாக வென்று இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி இருக்கிறார்..வாழ்த்துகளும் பாராட்டுகளும் திரு ஆனந்த் அவர்களே..ஆங்கில ஊடகங்கள், செஸ் விளையாட்டு ராஜா என அவரைக் கொண்டாடின. தமிழ் ஊடகங்கள் செக்ஸ் விளையாட்டு ராஜா நித்தியானந்தனைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன இன்னும்..

 ஆனந்தின் சில சாதனைகளின் பட்டியல் :
  • 6 வயதில் செஸ் விளையாட ஆரம்பித்த ஆனந்த் தேசிய சப் ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.(1983 - 84)
  • 1984ல் உலக சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம்.
  • 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆசிய சாம்பியன்.
  • 1987 சர்வதேச கிராண்ட் மாஸ்டரானார்.
  • 1998ல் உலகத் தரவரிசைப் பட்டியலில் 2வது இடம்.
  • 2000ல் முதல் உலக் சாம்பியன் பட்டம்.
  • 6 கம்ப்யூட்டர்களுடன் ஒரே நேரத்தில் விளையாடி 4 க்கு 2 என்ற அளவில் வென்றார்.
  • 3 முறை செஸ் ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.
  • இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதை முதலில் பெற்றவர்.
  • அர்ஜுனா, பத்மஸ்ரீ( மிக இளம் வயதில் பெற்றவர்), பத்ம பூஷன், ஸ்போர்ட் ஸ்டாரின் “ 1995ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர்” ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
  • ஆனந்தின் ”My best games of Chess" என்ற புத்தகம் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் வெளியிடப் பட்டது.
  • உலக சாம்பியன் பட்டம்- 2000, 2007, 2008, 2010
  • கோரஸ் சூப்பர் கிராண்ட்மாஸ்டர் டோர்னமண்ட் - 1989, 1998, 2003, 2004, 2006)
  • கோர்சிகா மாஸ்டர்ஸ் - 2000, 2001, 2002, 2003, 2004
  • செஸ் உலக்க் கோப்பை - 2000, 2002
  • இன்னும் ஏராளமான போட்டிகளையும் விருதுகளையும் வென்றுள்ளார்..
மீண்டும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஆனந்த்.. இந்தியா உங்களால் பெருமை அடைகிறது.. தமிழனாய் கூடுதலாகவும்..

ஞாயிறு, 9 மே, 2010

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!

உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?! அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.

இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல பேய்/பிசாசு, ஆவி தொடங்குவோம் நம்ம கணக்கை….

பேய்/பிசாசு/ஆவி

ghost3813xநம்ம பாரம்பரியத்துல, கலாச்சாரத்துல ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பா நாம எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பா இருக்கும். எனக்கு நியாபகம் இருக்கிற வரைக்கும் சொல்லனும்னா, நான் அதிகமா கேட்டது/சினிமாவுல பார்த்தது “வெள்ளையா ஒரு புடவ கட்டிகிட்டு, ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வர்ர ஒரு பொம்பள பேய பத்தித்தாங்க! அதுக்காக, நான் நெசமாவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன்னு எல்லாம் உங்க கிட்ட கப்சா உடறதுக்கு எனக்கு விருப்பமில்லீங்கோ! சரி, நாம மேட்டருக்கு வருவோம். அதாவது, நான் மேல சொன்ன மாதிரி உலகத்தோட எல்லா மூலைகள்ல இருந்தும் இந்த மாதிரி கதைகள் நெறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கவேயில்லீங்க சாமி! அது ஒரு அழகிய?! மர்மமாவேதான் இருக்கு!


அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

psychic

உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால் நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்! இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!

இறப்பை ஒத்த அனுபவங்கள்/ இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)

ndetunnel

படம்:கூகுள்

நம்மில் சில பேர், சமயத்துல சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதப்பத்தி சொல்லும்போது “செத்துப் பொழச்சவண்டா” அப்படின்னு சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவங்க, அந்த அனுவபம் பத்தி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ள போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துல வந்து, சொந்த பந்தங்களோட இணைஞ்ச மாதிரி ஒரு உணர்வு” அப்படின்னு எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? (குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருப்போம்!) . அதாவது, கல்லரையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு?! இதுமாதிரி கதைகள்? பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை! இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் காயப்பட்ட/பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவுல் இல்லை அப்படின்னு சொல்றாங்க!

உடல்-மூளை தொடர்பு !

mind_body_connection1நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது! இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை!

யு.எஃப்.ஓ/UFOs

ufoயு.எஃப்.ஓ என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருள்களை?! பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, அப்பப்போ வானத்துல திடீர்னு எதாவது ஒன்னு பறக்கிற மாதிரி தெரியும் (ஏரோப்ளேன் இல்லீங்க!), அது விண்கற்களா/ஏவுகனைகளா அப்படின்னு அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனுஷனோட வேலையா கூட இருக்கலாம் அப்படிங்கிறது இன்னொரு விஷயம்! என்னதான் கூர்மையா கவனிச்சி ஆய்வு பண்ணாலும் இது என்னன்னே தெரியாமதான் இருக்கோம் இதுவரைக்கும்?!

தேஜா வு (Deja vu)

“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது, இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!

இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம், நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!


மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)

பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே, நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?

ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)

top10_phenomena_intuition நம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன். அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!

மனிதன் போன்ற மிருகம்/Bigfoot

bigfoot3பல வருஷ காலமா அமெரிக்காவுல, பெரிய, அடர்த்தியான முடியோட, மனுஷன்மாதிரியே இருக்கிற “பிக்ஃபூட்”, அப்படிங்கிற மிருகத்தப் பார்த்ததா நெறைய பேர் சொல்லியிருக்காங்க! அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செஞ்சுகிட்டிருந்தா குறைந்தது ஒன்னையாவது, இல்லன்னா அதோட ஒரு பிணத்தையாவது கண்டுபிடிச்சிருக்கனுமில்ல இதுவரைக்கும்?! ஆனா அப்படி ஒன்னையும் இதுவரைக்கும் கண்டும் புடிக்கல, வேட்டையாடவும் இல்லங்கறதுதான் உண்மை! வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வச்சுகிட்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்குன்னு சொல்றதுல எந்த யதார்த்தமும் இல்ல அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதே மாதிரி, நம்மூர்ல ஒரு குறங்கு மனிதன்?! கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள காடுகள்ல?! இருக்கிறதா, ஆனந்த விகடன்ல ஒரு கட்டுரை படிச்சதா எனக்கு ஒரு நியாயபகம்?! உங்களுக்கு யாருக்காவது நினைவிருக்கிறதா? இருந்தா கொஞ்சம் சொல்லுங்க!

டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)

அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லங்கிறாங்களாம். எது எப்படியோ, அது என்ன சத்தம்னு இதுவரைக்கும் யாராலயும் உறுதியாச் சொல்லமுடியலயாம்!

இந்த பதிவு சுவாரசியம் குறைவு இல்லாம இருக்கும் என்று நினைக்கிறன் இது போன்று இன்னமும் பதிவுகள் வேண்டுமா உங்கள் கருத்துக்களை அளித்துவிட்டு போன்கோல் .

புதன், 5 மே, 2010

சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை நடைமுறை படங்கள்
(சிறு குறிப்பு டிவிட்டர் செய்தியை பெற அருகில் உள்ள மெனுவை பார்க்கவும்)