நல்வரவு GOOGLEYOUNG உங்கள் அணைவரையும் அன்புடன் வரவேற்கின்றது...!

Google YOUNG
உங்கள் அணைவரையும் அன்புடன் வரவேற்கின்றது...
நாங்கல்லாம் மோசமானவங்கள்ளையே முக்கியமானவங்க

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

“சுறா” ஆஸ்கருக்கு பரிதுரைக்கப் பட்டிருக்கிறது, “இளைய தலைவலி”யின் நடிப்புக்கு ஆஸ்கர் நிச்சயம் என்பார்கள்,அவர்களது ரசிகர் பட்டாளM “விசிலடிச்சான் ஞ்சுகள்”.

இவ்வாறு தான் கத்திய வைத்துக்கொண்டு இந்தப்படத்தை பார்க்கட் ..........செல்லனும்

















பேனரில்
விஜய் ஹெலிகாப்
டரில் இருந்து தலைமை செயலகத்தின் மொட்டைமாடியில் இறங்குவது போல கிராபிக்ஸ் செய்திருந்தார்கள். அப்படியே விஜய் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டிருந்தால் தேவலை என்று நினைத்துக்கொண்டேன்.















வில்லு
, குருவியென நான் பட்ட கொடுமைகளை ஒரு கையால் ஒதுக்கி வைத்து, “ஒரு தடவ கைய வச்சிட்ட அப்புறம் உன்னால யோசிக்கவே முடியாது” என்ற டிரெய்லர் பன்ச் வசனத்தை வசதியாக மறந்துவிட்டு சுறாவைக் காண சூறாவளியாக கிளம்பினேன்.

சட்டை பட்டனை போடாமல் திறந்த மார்போடு அதே திருமலை விஜய். ஆனால் இதுவரை போடாத கலர்களில் இருக்கின்றன அவர் அணியும் சட்டைகள். படத்தின் இரண்டாம் வித்தியாசம் அவரின் வீடு. கடற்கரையோரம் இருக்கிறது. இதுவரை எந்த விஜய் படத்திலும் இப்படி இருந்ததில்லை. அந்த குப்பத்தில் ஒரு போட்டி. யார் கடலின் நடுவே சென்று நிறைய மீன் பிடித்து வருகிறார்கள் என்ற போட்டி. வழக்கமாய் ரன்னிங் ரேஸ், கார் ரேஸ் என்றுதான் இருக்கும். ஆனால் இதில் வித்தியாசமாய் கடலில் ஒரு போட்டி. வழக்கம் போல் விஜய்தான் ஜெயிக்கிறார். ஜெயித்தவுடன் பாடல்.

வெற்றிக் கொடியேத்து..வீசும் நம்ம காத்து.

வழக்கமாக பாடல் முடிந்தவுடன் காமெடியன் வருவார். அதிலும் வித்தியாசம். முதலில் தமன்னாவை காட்டுகிறார்கள். அதன் பின்னே வடிவேலு வருகிறார். 50வது படமென்பதால் ஏதாவது வித்தியாசமாய் செய்ய வேண்டுமென்ற விஜயின் எதிர்பார்ப்பை சரியாக புரிந்துக் கொண்டு கதை செய்த இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அடுத்தடுத்த காட்சிகளில் இருவருக்கும் முட்டலும் மோதலுமாய் திரைக்கதை பயணிக்கிறது. நடுவில் குப்பத்தில் திருவிழா வருகிறது. சீரியல் பல்பு சகிதம் அடுத்த குத்திற்கு முக்கால் பேண்ட்டுடன் வருகிறார் விஜய்.

வங்க கடல் எல்லை. நான் சிங்கம் பெத்த பிள்ளை

வழக்கம் போல முழுப் பேண்ட் போடாதது, மார்க்கெட் போன நடிகையை ஆட வைக்காதது போன்றவை இந்தப் பாடலில் வித்தியாசமானவை. பாடல் முடிந்தவுடன் குப்பம் பற்றி எரிகிறது. துடித்து எழும் விஜய் சண்டை போடுகிறார். யார் இதற்கு காரணம் என்பதை யோசிக்கிறார். பின் அடுத்த நாள் தமன்னாவை சந்தித்து ரொமான்ஸ் செய்கிறார். முதலில் விஜய்க்கு காதல் வர உடனே ஃப்ளைட் பிடித்து நியிசிலாந்து சென்றுவிடுகிறார். பின்னாலே தமன்னாவும் தன்னைப் பற்றித்தான் பாடப்போகிறார் என்ற ஏக்கத்தோடு ஓடுகிறார். பாவம் அவர். விஜயின் பாடல் அவரை ஏமாற்றிவிடுகிறது.ஆம்

நான் நடந்தா அதிரடி..என் பேச்சு சரவெடி

என அங்கும் தன்னைப் பற்றியே பாடுகிறார் தளபதி. ஏமாற்றத்துடன் திரும்பும் தமன்னாவின் அப்பா, விஜயின் குப்பத்தை கோபுரமாக்க திட்டமிடுகிறார். அந்த இடத்தில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலும், பீச் ரிசார்ட்டும் கட்ட ஏற்பாடு செய்கிறார். அவர்தான் குடிசைகளை எரித்தவர் என்பது தெரியவர அவரின் வீட்டிற்கு சென்று அவரை அடித்துவிடுகிறார். அடித்ததோடு இல்லாமல் பன்ச் வசனமும் பேசிவிட கொதிக்கிறார் வில்லன்.

இதுவரை எறா. இனிமேல் சுறா என இடைவேளை விடுகிறார்கள். இடைவேளை விட்ட நேரம் கேட்டின் அருகில் சின்ன இடைவெளி விட்டிருந்தாலும் ஓடி வந்திருப்பேன். மூடிவிட்டார்கள். நானும் மூடிக் கொண்டு மீதி படத்தை காண சென்றேன். சற்று தாமதமாகிவிட்டது. அதற்குள் குப்பத்து விஜய் கோட்சூட்டுடன் நடந்துக் கொண்டிருந்தார்.

தமிழன் வீரத்தமிழன்.. தலைமை தாங்கும் ஒருவன்

என்று பாடிக் கொண்டிருந்தார் யாரோ. என்னடா.. தண்ணியடிச்சிட்டு திரிஞ்சவன் தண்ணி பாக்கெட் வாங்குற கேப்புல தலைவன் ஆயிட்டானா என்ற சந்தேகத்துடன் அமர்ந்தேன்.பாடல் முடிந்தவுடன் தமன்னா அவரைத் தேடி வந்தார். அவரைத் தெரியாது என்று சொல்லிவிடுகிறார் தலைவர். அழுதுக்கொண்டே செல்லும் தமன்னாவை பார்த்து “இதுதான் அவ கண்ணுல இருந்து வரும் கடைசி துளி கண்ணீர்” என்கிறார் விஜய். இது தமன்னா காதில் விழுந்துவிட உடனே பாடல்

சிறகடிக்கும் நிலவு. கரம்பிடித்தது என்னை

பாடல் முடிவதற்கும் ரிசார்ட் கட்ட வில்லனுக்கு அப்ரூவல் கிடைப்பதற்கும் சரியாக பொருந்திவிட சீறுகிறார் விஜய் வில்லனை நோக்கி. மீண்டும் சண்டை. மீண்டும் ஒரு பாடல். இந்த முறை

தஞ்சாவூர் ஜில்லாக்காரி கச்சேரிக்கு வாயேண்டி

அதன் பின் க்ளைமேக்ஸில் வில்லன் குழுவை பந்தாடிய பின் சுபம் போட்டார்கள்.

இனிமேல் விஜய் என்னதான் வித்தியாசமாய் நடித்தாலும் நான் என் முடிவை மாற்றிக் கொள்ளபோவதில்லை. வேட்டைக்காரன், வில்லு போன்ற முன்பழமைத்துவ காவியத்தை பார்த்துவிட்டு இனி விஜய் படமே பார்க்கக்கூடாது என்று எடுத்த அதே முடிவை இன்றும் எடுத்தேன். இனிமேல் விஜய் படம் கே டிவியில் கூட பார்க்கப்போவதில்லை.

வியாழன், 29 ஏப்ரல், 2010

என்னால் முடிந்த கவிதை

நட்பு காதல் இரண்டிற்கும்

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை

*********************************************

எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….

*********************************************

உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…

*********************************************

எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…

*********************************************

ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்…

*********************************************

நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு
ஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது?…..

*********************************************

புதன், 28 ஏப்ரல், 2010

கண்டிப்பா சிரிக்கோணும்

ஏண்டீ கண்ணு தெரியலையா உனக்கு

Photobucket

இவ்ளோ பெரிய ரோடு காலியா இருக்கும் போது உனக்கு எதுக்கு இந்த விபரீத விளையாட்டு
Photobucket

டே நடிக்கருதுக்கும் ஒரு டைமிங் இருக்கு டா

Photobucket

டே நான் சும்மா தானே போனேன் எதுக்குடா என்ன தள்ளி உடுற

Photobucket

எவன்டா இந்த டேபுள இப்டி போட்டது. வலிக்குதுடா

Photobucket

யார் கிட்ட வந்து டான்ஸ் ஆடிகிட்டு இருக்கே
Photobucket

பால மட்டும் போடுடா இன்னா எதுக்குடா அத புடிச்சி தொங்குற
Photobucket

வா கராத்தே கத்து தரேன்
Photobucket

டே பால ஒதைடா ன்னா என்ன ஏண்டா ஒதக்கற
Photobucket

சுறா காட்சிகள் ஒரு கற்பனை.

விஜய்க்கு இருக்குற மாஸ்க்கு இப்படிப்பட்ட காட்சிகள் தான் அவுருக்கு வேணும் என்பது என் ஆசை.மற்றபடி விஜய் அல்லது அவர் ரசிகர்களை கோபப்படுத்த எழுதுவில்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க.....
சரி நாம சுறாவுக்கு போவோம்....!!

*****************************************


இடம்: ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம்.

HSLV TFC3 என்ற ராக்கெட்டை மூன்று வருடம் கஷ்டப்பட்டு உருவாக்கி விண்ணில் விட காத்து இருக்கின்றர் இந்திய நாட்டு விஞ்ஞானிகள். இன்னும் ராக்கெட் விட பத்து நிமிஷம் இருக்கு நாம அதுக்குள்ள விஜய் இன்ட்ரோ
சீன் பார்த்துட்டு வந்துடுவோம்.

இடம்: பழவேற்காடு பீச்

ஊரே ஒட்டு மொத்தமா பீச்சில் காத்து இருக்கிறார்கள்.அப்படியே
கடலுக்கு போகஸ் பண்றோம்.அங்கே ஒரு சின்ன கட்டுமரத்தில்
வடிவேலு "என்னயா இவன் எறா புடிச்சிட்டு வரதுக்கு இவ்ளோ
நேரம் ஆகுது" என்று அலுத்து கொள்கிறார்.அப்படியே கடலுக்கு
அடியில் போறோம்.அங்கே ஒரு 30 அடி சுறா ஒன்னு விஜயை
தாண்டி போகுது.விஜய் அதை ப்ரீயா விட்டுட்டு பின்னாடி வர்ற
சின்ன சுறாவோட சண்டை போடுறாரு.கடைசியில் பார்த்தா அது
சின்ன பசங்க யாரோ பீச்சில் விளையாடிட்டு விட்டுட்டு போன சுறா
பலூன் பொம்மை.இருந்தாலும் ஒபெநிங்காக விஜய் அசால்ட்டா
எந்த வித பில்ட்-அப்பும் இல்லாம சுறாவை தோள் மேல்
போட்டு கொண்டு கரைக்கு வருகிறார்.ஆனா இன்ட்ரோ
சாங் உண்டு அதனால .ரசிகர்கள் யாரும் டென்ஷன் ஆக
வேண்டாம். நாம அதுக்குள்ள அங்கே போயிட்டு வந்துருவோம்.




**************************************

மறுபடியும் இடம் :ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம்.


ராக்கெட் விட்டு நுப்பது செகண்ட் கழித்து.....

"ஹோ ..மை காட்" என்று தலைமை விஞ்ஞானி நாசர் தலையில் அடித்து கொள்கிறார்.அருகில் இருக்கும் அவரது உதவியாளர் தமன்னா "என்ன சார் ஆச்சு??" நாசர் கண்ணாடியை கழற்றி "ராக்கெட்க்கு பெட்ரோல் போட மறந்துட்டேன்மா அது இன்னும் மூணு நிமிஷத்தில் கடலில் விழுந்துரும், நேத்து நைட் என் காரில் பெட்ரோல் இல்லைன்னு கொஞ்சம் ராக்கெட்இல் இருந்து எடுத்தேன்.. " '"அய்யோயோ" என்று கதறுகிறார் தமன்னா."இந்த ப்ராஜெக்ட் மட்டும் தோல்வி அடைஞ்சா நம்ம நாட்டுக்கே பெரிய அவமானம் ஆயிடும்" "சார் நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க என் ஆளு பழவேற்க்காட்டில் தான் இருக்கார்...அவர் சுறா மாதிரி நம்ம பிரச்சனையை சால்வ் பண்ணிடுவார்".


இன்ட்ரோ பாட்டு முடிந்தவுடன்.தமன்னா விஜய்க்கு போன் பண்ணி ராக்கெட் மேட்டரை கூறியவுடன் பழவேற்காடு ஏரியா சலசலக்கிறது.
ஊரே கூடி நிற்கிறது நடுவில் நம்ம தளபதி விஜய் அவர்கள் பேச
ஆரம்பிக்கிறார்.....

" நம்ம நாட்டு விஞ்ஞானிங்க செய்ஞ்ச ராக்கெட் பெட்ரோல் இல்லாம
கடலில் விழ போகுதாம்...அந்த ராக்கெட் விலை எவ்ளோ தெரியுமா
300 கோடி"....

"300 கோடியா" என்று வாய்பிளக்குறார் வடிவேலு.

தொடர்ந்து விஜய் "நாம 50,000க்கு புது வண்டி வாங்கினாலே
ஓட்டறதுக்கு முன்னாடி அதை போய் சென்ட்ரல் எதிரே இருக்கிற
பாடிகாட் முனிஸ்வரன் கோயில்ல கொண்டு போய் பூஜை போட்டு தான் எடுக்குறோம், ஆனா நம்ம நாட்டு விஞ்ஞானிங்க 300கோடிக்கு வண்டி செய்ஞ்சிட்டு பாடிகாட் கோயில்ல பூஜை போடாம ராக்கெட்டை விட்டா எப்படி போகும்னு கேக்குறேன்..."

"அப்படி கேளு ராசா" என்று ஒரு கிழவி கைத்தட்ட ஆரம்பித்தவுடன் சுத்தி நிக்கும் கூட்டம் விண்ணை பிளக்க கைதட்டுகிறது....

மேலும் விஜய் "அப்புறம் நம்ம கிட்டவந்து காப்பாத்துனா எப்படி?,
இதுக்குதான்........"

அப்போது ஒரு சிறுவன் வீட்டுக்குள் சென்று விஜய் மேலும் மொக்கை போடுவதை நிறுத்த அடுத்த வாரம் தீபாவளிக்கு வாங்கி வைத்திருந்த பட்டாசுகளில் இருந்து நாலு ராக்கெட்டை எடுத்து வருகிறான்..

"இந்தாங்க மாமா என்னால முடிஞ்சது' என்று அந்த சிறுவன்
நாலு தீபாவளி ராக்கெட்டையும் விஜயிடம் கொடுக்கிறான்.
விஜய் அவனை கட்டிபிடித்து "யாருக்கும் வராத ஐடியா உனக்கு
வந்திருக்கு"... உடனே சுத்தி நின்ன எல்லோரும் அவர் அவர்
வீட்டுக்குள் சென்று ஆளுக்கு நாலு ராக்கெட் எடுத்து வந்து
விஜயிடம் கொடுக்கிறார்கள்.

ஆகமொத்தம் நூறு தீபாவளி ராக்கெட்டை முதுகில் கட்டி கொள்கிறார் நம்ம விஜய். அப்புறம் கெட்-அப் சேன்ஜ்க்காக நெற்றியில் சிகப்பு கர்சீப்பை கட்டி கொள்கிறார். அதுதவிர நிஜ ராக்கெட்டில் பெட்ரோல் நிரப்ப இருபது லிட்டர் பெட்ரோல் கேனையும் எடுத்து கொள்கிறார்.முதுகில் இருக்கிற ராக்கெட்
அந்த சிறுவனால் பற்ற வைக்கப்படுகிறது.


விஜய் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட்டை சேஸ் பண்ணி கொண்டு மேல
பறக்கிறார். ராக்கெட் பக்கத்தில் விஜய் போனவுடன் கையில் இருக்கும் பெட்ரோல் கேனின் மூடியை கழற்றி ராக்கெட்டில் உள்ள பெட்ரோல் டேங்கை சுத்தியும் முத்தியும் ரெண்டு ரவுண்டு அடித்து தேடுகிறார். ஆனா பாருங்க ராக்கெட்டில் எங்கே பெட்ரோல் டேங்க் இருக்குனு தெரியல......!!



ராக்கெட் வேற பெட்ரோல் இல்லாம சாய ஆரம்பிக்குது, தளபதி என்ன பண்ணலாம்னு யோசிக்கிறார். உடனே நெற்றியில் இருந்து சிகப்பு கர்சீப்பை எடுத்து ஒரு முனையை ராக்கெட் தலையில் உள்ள சின்ன கிளாம்பில் கட்டுகிறார். கர்ச்சீப்பின் மறுமுனையை வாயில் வைத்து பல்லால் கடித்து கொண்டு ராக்கெட்டை டோ (tow) செய்து கொண்டு போகிறார்.இங்கே தான் கேமராவை நாலு ரவுண்டு சுத்தி விஜய் ராக்கெட்டை டோ பண்ணிட்டு போறதை காட்றோம். அப்படியே டோ பண்ணிட்டே விண்வெளி வரை போய் ராக்கெட்டை பத்திரமாக விட்டு வருகிறார்.


இங்கே ஸ்ரீஹரி கோட்டாவில் ராக்கெட் வெற்றிகரமாக பயணம் முடித்ததற்கு ஆள் ஆளுக்கு கட்டி பிடித்து கொள்கிறார்கள்.நம் விஞ்ஞானிகள் மற்றும் நாட்டின் மானத்தை காப்பாற்றுகிறார் இளைய தளபதி டாக்டர் விஜய்!!

இது தான் சுறா மாஸ்....

(உங்கள் குரல்: முதல்ல கர்சீப்பை தடை செய்யுங்கப்பா......)

தடை செய்ஞ்சா, அப்புறம் எப்படி விஜய் தலைக்கு தொப்பி
போட்டுட்டு முட்டிக்கு கிழே கர்சீப் கட்டிட்டு வில்லு படத்தில்
வர்ற மாதிரி மாறுவேஷத்தில் வில்லன்களை வேட்டையாட
போவாரு...??

உங்களுக்கு இந்த இடுகை பிடித்திருந்தால் தாறுமாறாக ஓட்டும்
பின்னூட்டமும் குத்தவும் என்று கேட்டு கொள்கிறேன்.


திங்கள், 26 ஏப்ரல், 2010

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினை பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்ப சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

சிறு வயது வாழ்க்கை

வில்லியம் ஹென்றி கேட்ஸ் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் பிறந்தார். இவரது பெற்ரோர் வில்லியம் ஹெச். கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது குடும்பம் இயற்கையாகவே நல்ல வளம் மிக்கதாகவும், இவரது தந்தை போற்றத்தகுந்த வழக்குரைஞராகவும் இருந்தார். கேட்ஸ் தன் பாலகர் படிப்பில் கணிதத்திலும், அறிவியலிலும் நல்ல முறையில் தேர்வானார். பின்னர், தன் பதி்மூன்றாவது வயதில் சியாட்டிலில் பேர் வாயிந்த, லேக்சைட் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

இவர் எட்டாம் வகுப்பு பயிலும் போது, லேக்சைட் பள்ளியில் ஒரு கணினி (உண்மையில் அது ஒரு டெலிப்ரிண்டர் வகையை சேர்ந்தது ஆகும்) மற்றும் தினசரி சில மணி நேர கணினி (இது General Electric நிறுவனத்தின் கணினி ஆகும்) பயன்பாட்டுக்காக வாங்க பட்டது. மாணவர்களுக்கு கணினி பயன்று கொள்ள வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும். கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். இவரது ஆர்வத்தை பார்த்து பள்ளி இவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது, அதன் மூலம் இவரால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது. ஆனால், கேட்ஸ் மற்றும் இதர மாணவர்கள் கணினியின் இயங்கு தளத்தில் (Operating System) உள்ள ஒட்டைகளை பயன்படுத்தி அதிக கணினி நேரத்தை உபயோகித்தாக குறை கூறி தினசரி சில மணி நேர கணினி பயன்பாட்டு திட்டம் பயன்படுத்த தடை செய்யப்பட்டது.

இளமை

பில்கேட்ஸ் தனது பள்ளி படிப்பை ஒரு தொடக்கப் பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலேயே அவருக்கு ப்ரோகிராமிங்கில் ஆர்வமிருந்ததால், தனது 13ம் வயதிலெயே ப்ரோகிராம் எழுத தொடங்கினார். பிறகு 1973ல் ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். அங்கு அவரது நண்பர் ஸடீவ் பால்மரின் வீட்டில் தங்கியிருந்தார்.தனது படிப்பை ஹர்வர்ட் பல்கலை கழகத்தில் முடித்த பிறகு, தனது பால்ய வயது சிநேகிதன் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975ல் துவங்கினார். கணிப்பொறி பிற்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கின்ற நம்பிக்கை அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இருந்தது இதனால் அவர்கள் கணிப்பொறிகு தேவாயான மென்பொருள்களை எழுத துவங்கினர். அவருடைய இந்த தொலை தூர நோக்கம் தான் இன்று அவரும் அவருடைய நிறுவனத்துக்கும் மிக பெரிய வெற்றியை தேடி தரலானது. இவருடைய தலைமயில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நோக்கமானது, நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியும், கணினி உபயோகிப்போருக்கு பூரண மன திருப்தியையும் ஏற்பட வேண்டும் என்பதே ஆகும்.

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

மும்பை வெற்றி பெற்றுக்கொண்டது IPL கப்

இன்று சச்சின் தலைமைள்ளன அணியும் தோனி தலைமைள்ளன அணியும் மோதவுள்ளது நான் நேற்று இரவு தூங்கும் போது மும்பை இவ் ஆண்டு IPL கப் வெற்றிகொண்டமாதிரி கணவு கண்டன் . மலிங்கவுக்கு MAN OF THE SERIES கிடைக்குது சச்சின் 19 பந்துகளுக்கு 50 ஓட்டம் கடக்குறார். திவாரி ௨0 க்கும் குறைந்த ஓட்டம் எடுக்குறார் இவ்வாறு எனது கணவு தொடர்ந்தது ... ஓகே மனசுக்குள்ள என்ன திட்ட ஆரம்பிக்குரிங்க எனக்கு புரியுது வானம் விட்டுடுங்க வலிக்குது எப்படி யினும் மும்பைக்கு வெற்றி உரித்தாக இறைவனை பிராதிப்பதுடன் சென்னைக்கும் வாழ்த்து தெரிவிகிரன் . சிறிய பதிவு இது வரும் காலங்களில் நல்ல , மொக்கையான , ஆண்களுக்கான அழகு குறிப்புகளுடனும் , புது விடயங்களுடனும், சுவாரசியமான விடயங்களும் மேலும் இன்னோரன்ன YOUNGS விடயங்களுடன் உங்களுக்காக இந்த தளம் காட்சி படுத்தப்படும் . நாளை மறுதினம் முதல் இது போன்ற விடயங்கல் ஆரம்பமாகும் . தொடர்ந்து வருக வருக வந்து சும்மா போகாம வாக்களித்து விட்டுட்டு போன்கோல்

வியாழன், 22 ஏப்ரல், 2010

விலங்கு கண்களின் ஒரு சிறிய விளையாட்டு

தினமும் தொழில்நுட்ப பதிவா போட்டு நம்ம மூளை ரொம்ப டயார்டாகி போய் நம்மகிட்ட சண்டைக்கு வருதுங்க. இனிமேல் யோசிக்கவே யோசிக்காதாம். ஸ்ட்ரைக் பண்ண போகுதாம். சரி எதுக்கு அந்த வம்புன்னு அதுக்கு இன்னைக்கு ரெஸ்ட் கொடுத்துட்டு உங்க மூளைக்கெல்லாம் கொஞ்ச வேலை கொடுத்து இருக்கிறேன்.

இது ஒரு விளையாட்டு கீழே சுமார் 20 விலங்குகளின் கண்கள் கொடுத்து இருக்கிறேன். அதை வைத்து அது எந்த மிருகம் என்று கண்டு பிடிக்க வேண்டும். ஏறக்குறைய 15 விலங்குகளின் கண்களை சரியாக கண்டுபிடித்தால் உங்களுடைய ஞாபக சக்திக்கும், பார்வை திறனுக்கும் ஒரு ஓ போட்டு கொள்ளுங்கள்.














என்ன
முடியலையா. சரி போயிட்டு வாங்க.

ARROW


ARROW


ARROW


ARROW


ARROW


ARROW


ARROW


ARROW


ARROW


ARROW


ARROW


ARROW

அதெப்படி நம்பாளுங்க இவ்வளவு தூரம் வந்து விடையை தெரியாம போயிடுவோமா

ARROW

முதல் வரிசை

1. பெங்கால் டைகர், 2. ஆசிய யானை, 3. வரிக்குதிரை, 4. சிம்பன்சி, 5. பிளமிங்கோ

இரண்டாவது வரிசை

1. பூனை , 2. ஹேர்லெஸ் ஷ்பைன்க்ஸ் பூனை, 3. ஓநாய் 4. பருந்து 5. இகுனா

மூன்றாவது வரிசை

1. மெக்காவ், 2. ஜாகுவார், 3. எலி, 4. சிறுத்தை 5. குதிரை

நான்காவது வரிசை

1. பெண்சிங்கம் 2. டிராகன் 3. கெக்கோ 4. பென்குயின் 5. முதலை

ஐந்தாவது வரிசை

1. ஆந்தை 2. சிங்கம் 3. கான்றிக்ட்டர் 4. பபர் பிஷ் 5. ஆப்ரிக்கா கொக்கு

புதன், 21 ஏப்ரல், 2010

ஐ.பி.எல் - ஒரு நகைச்சுவை பார்வை







{{{{{[guhankatturai.blogspot.com]}}}}} urimai ivarukku

செவ்வாய், 20 ஏப்ரல், 2010



  • மற்றவர்களை எரிச்சல்படுத்துவது எப்படி...

மற்றவர்களை எரிச்சற் படுத்துதல் அல்லது கொச்சை மொழியில் கடுப்பாக்குதல் என்பது பலருக்கு மிகவும் பிடித்த செயற்பாடுகளில் ஒன்று...
அப்படியான நண்பர்களுக்காக உங்கள் அன்பு நண்பன் aazEER இன் அழகு அறிவுரைகள்...


10. சிரிப்பு...
சிரிப்பு என்பது சாதாரண விடயமல்ல. சிரிப்பின் மூலம் இணர்டு பிரதான விடயங்களை செய்யலாம். ஒன்று எல்லாவற்றுக்கும் சிரிப்பது. மற்றையது அவர் சொல்லும் எல்லா நகைச்சுவைகளைக் கேட்ட பின்பும் பேசாமல் வாயைத் திறக்காமல் இருப்பது.
உதாரணமாக 'எனது செல்லப்பிராணி இறந்துவிட்டது' என்று ஒருவர் சொல்லும் போது உடனே ஹா ஹா ஹா என்று சத்தமாகச் சிரியுங்கள்... மனிதர் குழம்பிவிடுவார்.
அதேவேளை மிகக் கஷ்ரப்பட்டு நல்ல நகைச்சவையை சொன்ன பின்னர் அமைதியாக இருங்கள்...

9. இலக்கணம்...
நீங்கள் அலுவலகத்தில் வேலைசெய்பவராக இருந்தால் உங்கள் மேலதிகாரியையும், உங்கள் சகதொழிலாளர்களையும் எரிச்சல்படுத்த மிகச்சிறந்த வழி, இலக்கணப்பிழையாக இருப்பது. தான். எல்லாவற்றையும் பிழையாக எழுதுதல் தான் அதன் வழி. 'ஆது ஆவர்களை பையங்கைரமாக கூழப்பூம். ஆது ஆவர்களை பாடு பாயங்காரமாக ஏரிச்சால் பாடுத்தும். எற்பாடுகீன்ற கூழப்பாத்தீல் ஊங்காள் பாக்கமே ஏட்டீப் பார்க்காமட்டர்கள்'


8. இணையம்...
சகாக்களை எரிச்சல்படுத்த இன்னொரு வழி, ஊரிலுள்ள வெற்று வேட்டு மின்னஞ்சல்களையெல்லாம் அவர்களுக்கு முன்னகர்த்துங்கள். அதுவும் முக்கியமாக காதலிக்கும் நண்பர்களுக்கு அனுப்புங்கள். காதலியின் மின்னஞ்சல் வரும் என ஒவ்வொருமுறையும் மின்னஞ்சலைப் பார்க்கும் போது உங்கள் பிரயோசனமற்ற மின்னஞ்சல்களைப் பார்த்து கொலைவெறியுடன் உங்களைத் தேடிவருவார்கள்.


7. பிறகென்ன நடந்தது?
அலுப்புத் தரக்கூடிய தமிழ்வார்த்தைகளில் இதுவும் ஒன்று.
யாராவது ஏதாவது சொல்லும் போது அமைதியாக இருந்துவிட்டு முகத்தில் உணர்ச்சிகள் எவற்றையும் காட்டாமல் 'பிறகென்ன நடந்தது?' என்று கேளுங்கள். அவர்கள் உங்களை கத்தி எடுத்து குற்றும் வரை அல்லது துப்பாக்கி எடுத்து சுடும் வரை 'பிறகென்ன நடந்தது?' என்று கேட்டுக்கொண்டே இருங்கள்.
(குற்றிய பிறகு அல்லது சுட்ட பிறகு உங்களால் கேட்க முடியாது என்பது சோகமான விடயம்.)


6. நேரடி கண்பார்வையை தவிருங்கள்...
இது கேட்பதற்க சிறியவிடயமாக இருக்கும். ஆனால் மிக சக்திவாய்ந்தது. யாராவது உங்களுடன் கதைக்கும் போது அவர்களது கண்களைப் பார்க்காதீர்கள். அவர்களது நெற்றியைப் பார்த்துக் கதையுங்கள். ஒன்றில் தாங்கள் கதைப்பது எதிலும் ஏதும் பிழையிருக்கிறதோ என்று யோசிப்பார்கள் அல்லது தலையில் ஏதும் இருக்கிறதா என தடவிப் பார்ப்பார்கள்.


5. நகைச்சுவை சொல்லுங்கள்...
ஆம்... நகைச்சுவையை சொல்லுங்கள். மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிகப் பெரிய நகைச்சுவையை சொல்லுங்கள். முடிவை மறந்துவிட்டு தலையைச் சொறியுங்கள்.
பக்கத்தில் கிடைக்கும் கட்டையை எடுத்து உங்களைத் தாக்காவிட்டால் அந்த நபரில் ஏதோ பிழையிருக்கிறது என்று அர்த்தம்.


4. சுத்தமாக இருங்கள்...
படுபயங்கர சுத்தமாக இருங்கள். ஆம். மற்றவர்கள் தாங்கள் அசுத்தமாக இருக்கிறோம் என நினைத்தால் அவர்களுக்கு கஷ்ரமாக இருக்கும். எப்போதும் கைகளில் லைசோல், டெற்றோல், நறுமண சிவிறிகள் போன்றவற்றோடு திரியுங்கள்.
அவர்கள் அலுவலகத்தில் தொடும் ஒவ்வொரு பகுதியையும் லைசோல். டெற்றோல் போட்டு கழுவுங்கள்.
அவர்கள் உங்களுடன் கைகுலுக்கினால் உடனே கையை மருந்து போட்டுக் கழுவுங்கள். அத்தோடு நறுமண சிவிறியை கையில் உடனே தெளியுங்கள்.
முகத்தைச் சுழித்து ஓர் பார்வை பார்த்து முறைக்காவிட்டால் வந்து சொல்லுங்கள்.


3. பாடல் பாடுங்கள்...
ஆம். மிகப்பிரபலமான, மென்மையான பாடலை மிகச்சத்தமாக திரும்பத் திரும்ப பாடிக் கொண்டே இருங்கள். முக்கியமாக உங்களுக்கு கிட்ட இருக்கும் நபர்களுக்கு பிடித்த பாடலாக இருந்தால் மிக்க நல்லது.
ஒரு கட்டத்திற்கு மேல் 'நிறுத்துடா' என்றோ 'Stop it' என்றோ கத்தாவிட்டால் அவருக்கு உங்கள் பாடல் திறமையால் காது கேட்காமல் போய்விட்டது என்று அர்த்தம்.


2. எனக்குத் தெரியும்...
யார் என்ன சொன்னாலும் 'எனக்குத் தெரியும்..' என்று சொல்லுங்கள். சொல்வது உங்கள் மேலதிகாரியாக இருந்தாலும் முகத்தில் அறைந்தது போல் 'எனக்குத் தெரியும்' என்று சொல்லுங்கள். மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். முயற்சித்துப் பாருங்கள்...


1. எல்லாவற்றிலும் சிறந்தது சொல்கிறேன்...
இவை எல்லாவற்றையும் விட மிக சக்தி வாய்ந்தது இப்படியான மொக்கைத்தனமான அறிவுரைகள் கொண்ட இரண்டு பதிவுகள் இட்டுப் பாருங்கள்... அவனவன் வந்து கும்மிற்றுப் போவான்...
(ஆனா எனக்கு கும்மக் கூடாது... நான் பச்சப் புள்ள... அகில உலக விரல் சூப்பிகள் சங்கத்தின் ஆயுட்காலத் தலைவர்... தூரத்தில இருந்து பாக்கத் தான் பயங்கரமா இருப்பன்... கிட்ட வந்தீங்க எண்டா மயங்கி விழுந்திடுவீங்க... சீ.. சீ... கிட்ட வந்தீங்க எண்டா 'கெக்க புக்க கெக்க புக்க' எண்டு சிரிப்பீங்க...)

இரகசியம், பரம இரகசியம்...



கார் பிரேக் டவுன்.
அது ஒரு இரவு நேரம்.
காட்டு பிரதேசம்.
துணைக்கு யாருமில்லை.
நகரமோ வெகு தொலைவில்.

அருகில் ஒரு மடாலயம்.
'அன்று இரவு எங்காவது தங்கி, பின் காலையில் ஆகவேண்டியதை பார்த்துக்கொள்ளலாம்' என்ற எண்ணம் உதிக்க, மடத்தின் கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்த துறவியிடம், ' என்னுடைய கார் பிரேக் டவுன் ஆகிவிட்டது, இன்றிரவு இங்கு தங்குவதற்கு அனுமதி கிடைக்குமா?' என்றான்.

துறவியும் பெருந்தன்மையுடன் அனுமதித்து அறுசுவை உணவளித்ததோடு, அவனுடைய காரையும் சீடர்களைக் கொண்டு சரிசெய்தார்.

அவனும் மிகுந்த களைப்போடு உறங்கப் போகும் பொழுது, ஒரு விசித்திரமான ஒலியை கேட்டான். இதற்கு முன் கேட்டிறாத அந்த ஒலி அவனை மிகவும் பரவசப்படுத்தியது.

மறுநாள் காலை துறவிகளிடம் 'அந்த ஒலி'யைப் பற்றி விசாரித்தான்.
அதற்கு ஒரு துறவி, ' அந்த ஒலியைப் பற்றி உனக்கு எதுவும் சொல்ல முடியாது. . .

ஏனென்றால்

நீ ஒரு துறவி அல்ல'.

அவன் மிகுந்த ஏமாற்றமடைந்தாலும், துறவிகளுக்கு நன்றி சொல்லிவிட்டு அவனுடைய வழியில் கிளம்பினான்.

ஒரு சில வருடங்களுக்கு பின். . .

மறுபடியும் அதே மடத்தின் அருகில் அவனுடைய கார் பழுதடைந்தது.
அன்று அவனை உபசரித்தது போலவே, இம்முறையும் அவனுக்கு உணவளித்து, காரையும் சரிசெய்தார்கள்.

அன்றிரவும், அந்த வினோத ஒலி!

மறுநாள் காலை துறவிகளிடம் 'அந்த ஒலி'யைப் பற்றி விசாரித்தான்.
அதற்கு ஒரு துறவி, ' அந்த ரகசிய ஒலியைப் பற்றி உனக்கு எதுவும் சொல்ல முடியாது. . .

ஏனென்றால்

நீ ஒரு துறவி அல்ல'.

அவன், 'சரி! நான் துறவியானால்தான் அந்த ரகசிய ஒலியைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்றால்... நான் எவ்வாறு துறவி ஆக முடியும்?..'

துறவி பதிலலித்தார்.
' நீ இந்த உலகம் முழுவதும் சுற்றி வந்து, இவ்வுலகில் உள்ள புற்களின் தளைகளின் எண்ணிக்கையையும், மணல் துகள்களின் எண்ணிக்கையையும் மிகச் சரியாக அறிந்து கொண்டால்.. நீயும் துறவி ஆகி விடலாம்'.

அவன் தனது பாதையை நிர்ணயித்துக் கொண்டான்.

40 வருடங்களுக்கு பின்,

அவன் மறுபடியும் அந்த மடத்தின் கதவை தட்டினான்.

அனைத்து துறவிகளின் முன்னிலையில் வெற்றிக்களிப்போடு சொன்னான்.

' நான் உலகம் முழுவதும் சுற்றி வந்தேன்.
மொத்த புற்களின் எண்ணிக்கை 549,483,145,236,284,232.
மொத்த மணல் துகள்களின் எண்ணிக்கை 766,899,231,281,219,999,129,382

மூத்த துறவி,' நல்லது, நீ இப்பொழுது துறவி ஆகிவிட்டாய்.
இப்பொழுது அந்த வினோத ஒலியின் இரகசியத்தை காணலாம்'

மூத்த துறவி, அழகிய மரவேலைப்பாடுகளுடனிருந்த கதவை காட்டி,
'அந்த இரகசியம் இதற்கு பின்னால் இருக்கிறது' என்று, அதன் திறவுகோலை அவனிடம் தந்தார்.

கதவை திறந்தவுடன்.
அதனுள், கல்லினால் ஆன மற்றொரு கதவு.

அதையும் திறக்க,

மாணிக்க கற்களினால் அலங்கரிக்கப்பட்ட கதவு.

உள்ளே,

நீலநிற கற்களினாலான கதவு.

மிகுந்த ஆர்வத்துடன் ஒவ்வொன்றாக திறந்து உள்ளே போய் கொண்டிருந்தான்.

'மரகதம்'

'வெள்ளி'

'புட்பராகம்'

'செவ்வந்திக்கல்'

இறுதியாக துறவி சொன்னார்,' இதுதான் இறுதி கதவிற்கான திறவுகோல்.'

அவனும் முடிவில்லாப் பயணம் முற்றுப்பெறப்போவதை எண்ணி மிகுந்த ஆர்வத்துடன் அந்த கதவைத் திறந்தான்.

உள்ளே,

அவன் கண்ட காட்சி.

அற்புதம்!

ஆனந்தம்!

பேரின்பம்!

அந்த வினோத ஒலியின் இரகசியத்தை கண்டான்.

இதற்குமுன் அவன் அனுபவித்து அறியாத ஓர் உன்னத உணர்வு.
மெய் மறந்து நின்றான்.


ஆனால், நான் சொல்ல முடியாது..

அது என்னவென்று..

ஏனென்றால்..

நீ ஒரு துறவி அல்ல!. .